கனடா நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசு வெற்றி பெற்றது.
ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான, சிறுபான்மை லிபரல் கட்சியை ஆதரித்துவந்த புதிய ஜனநாயக கட்சி, சமீபத்தில் தனது அதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தது. இதனைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது.
இதில் 211 பேரின் ஆதரவுடன் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசு வெற்றிபெற்றது. இருப்பினும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக ட்ரூடோவுக்கு மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.