வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்படும் இந்தியா : மூடிஸ் ஆய்வறிக்கையில் தகவல் - சிறப்பு கட்டுரை!
Jul 26, 2025, 07:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்படும் இந்தியா : மூடிஸ் ஆய்வறிக்கையில் தகவல் – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Sep 29, 2024, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆசியாவிலேயே வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடாக இந்தியா உள்ளது என்று மூடிஸ் ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட இரண்டாவது நாடாக இந்தியா விளங்குகிறது. புவியியல் அமைப்பு ரீதியாக, இந்தியா தொடர்ச்சியான கடுமையான பருவமழை மற்றும் பெரும் வெள்ளத்தால் அடிக்கடி பாதிப்பாக்குள்ளாகிறது.

உலகளவில் 2.7 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெள்ள அபாயங்களை எதிர்கொள்கின்றனர், எனினும், தெற்காசியா தான் மிகவும் பாதிக்கப்படுகிறது.

இந்த சூழலில், காலநிலை மாற்றம், நகரமயமாக்கல் மற்றும் நிலப் பயன்பாடு ஆகியவற்றிலிருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை வெளிப்படுத்தும் விதமாக சமீபத்தில், மூடிஸ் மதிப்பீட்டு நிறுவனத்தின் அறிக்கை வெளிவந்துள்ளது. மேலும், பயனுள்ள பேரிடர் மேலாண்மையின் அவசியத்தையும் இந்த அறிக்கை வலியுறுத்தி உள்ளது.

உலகளவில் 2.7 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெள்ள அபாயங்களை எதிர்கொள்கின்றனர், என்றாலும் தான் தெற்காசியா மிகவும் பாதிக்கப்படுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வாழும் 2.7 பில்லியனில், மூன்றில் ஒரு பகுதியினர், உள்நாட்டு அல்லது கடலோர வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வாழ்கின்றனர். இது, இந்தியாவின் மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்கு ஆகும் .

ஆசியாவிலேயே வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடான இந்தியாவில் 622 மில்லியன் மக்கள் அல்லது 44 சதவிகித மக்கள் உள்நாட்டு வெள்ளத்தால் பாதிக்கப்படுவார்கள் என்றும், மேலும் 48 மில்லியன் மக்கள் கடலோர வெள்ளத்தால் பாதிக்கப்படுவார்கள் என்றும் மூடிஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவை தொடர்ந்து மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளாக சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் உள்ளன.

சீனாவின் மக்கள் தொகையில் 32 சதவீத மக்கள் வெள்ளத்தால் ஆபத்தை எதிர்கொள்கின்றனர் என்றும், பாகிஸ்தானில் 61 சதவீத மக்களும், பங்களாதேஷில் 73 சதவீத மக்களும், இந்தோனேசியாவில் 38 சதவீத மக்களும், உள்நாட்டு வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என்று மூடிஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு நேர்மாறாக, உள்நாட்டு வெள்ளத்திற்கு மிகக் குறைவான வெளிப்படும் பகுதியாக ஓசியானியா உள்ளது. அதன் மக்கள்தொகையில் 17 சதவீதத்துக்கும் குறைவானமக்களே வெள்ளத்தால் ஆபத்தைச் சந்திப்பதாக இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

ஐரோப்பா மற்றும் வட ஆசியா ஆகியவை மிகக் குறைந்த அளவே கடலோர வெள்ள அபாயத்தைக் கொண்டுள்ளன. அவற்றின் மக்கள் தொகையில் 0.27 சதவீத மக்கள் மட்டுமே வெள்ளத்தால் பாதிப்படைகின்றனர் என மூடிஸ் அறிக்கை கூறுகிறது.

1975 ஆம் ஆண்டு முதல் ஏற்பட்ட காலநிலை மாற்றம், நகரமயமாக்கல் மற்றும் நில பயன்பாட்டில் புதிய நடைமுறைகள் காரணமாக வெள்ள அபாயங்கள் அதிகரித்து வருகிறது.

உலக அளவில், சுமார் 260 மில்லியன் மக்கள் கடலோர வெள்ள ஆபத்தில் உள்ளதாகவும், அவர்களில் 70 சதவீதக்கும் அதிகமானோர் இந்தியா,சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இந்தோனேசியா ஆகிய ஐந்து நாடுகளில் மட்டுமே குவிந்துள்ளனர்.

பங்களாதேஷில், முழு மக்களும் உள்நாட்டு அல்லது கடலோர வெள்ளத்திற்கு ஆளாகிறார்கள் என்றும், பாகிஸ்தானில் ஐந்தில் மூன்று பேர் உள்நாட்டு வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் வசித்து வருவதாக கூறியிருக்கும் மூடிஸ் அறிக்கை, வரும் காலங்களில் வெள்ள ஆபத்து வளர்ந்து வரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று சுட்டிக் காட்டி உள்ளது.

உலகப் பொருளாதார மன்றத்தின் இணையதளத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், 2050ஆம் ஆண்டுக்குள் பருவநிலை மாற்றத்துக்காக, ஆண்டுக்கு 1.7-3.1 டிரில்லியன் டாலர்கள் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

Tags: India floodsndia is the most flood-prone countryMoody's report
ShareTweetSendShare
Previous Post

கேரள மாநிலம் ஆலப்புழாவில் படகு போட்டி – ஆர்வமுடன் கண்டு ரசித்த பார்வையாளர்கள்!

Next Post

துணை முதலமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின் – வந்தது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Related News

மடப்புரம் அஜித் குமார் லாக்கப் கொலை : சிபிஐ அதிகாரிகள் இரு குழுக்களாகப் பிரிந்து விசாரணை!

பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்ற மாலத்தீவு அதிபர் முய்சு!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

Load More

அண்மைச் செய்திகள்

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies