தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் 14-ஆவது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கெளரவித்தார்.
சென்னை பெருங்குடி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எல்எல்பி, ஐந்தாண்டு பட்டப்படிப்பு, முதுநிலை, முனைவர் பட்டம் முடித்த 4 ஆயிரத்து 669 பேருக்கு பல்கலைக் கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி கிருஷ்ணகுமார் முதன்மை விருந்தினராக பங்கேற்றார்.
பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் சந்தோஷ்குமார், பதிவாளர் கௌரி ரமேஷ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டார். சட்டப் பல்கலைக் கழகத்தின் இணைவேந்தரும் தமிழக சட்டத்துறை அமைச்சருமான ரகுபதி, தனிப்பட்ட சில காரணங்களால் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியானது.