நடிகர்களின் ஊதியம் குறித்து அக்டோபர் 15ம் தேதிக்குள் முடிவெடுப்பது தொடர்பாக
தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஆலோசிக்கப்பட்டது.
சென்னை அண்ணாசாலையில் உள்ள தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில், நடிகர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தலைவர் நாசர், தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்த் திரைப்படத்துறையில் மறு சீரமைப்பை, தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், பெப்சி தொழிற்சங்கங்கள் பின்பற்ற, புதிதாக போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், 37 பரிந்துரைகள் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
மேலும், நடிகர்களின் ஊதியம் தொடர்பான பிரச்சனைகளுக்கு அக்டோபர் 15-ம் தேதிக்குள் தீர்வு காண்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.