கூடங்குளம் முதலாவது அணு உலையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், முதலாவது அணு உலையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணியில் விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.