ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், போலி சலுகைகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சிவகாசியில் தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் தலைவர் ராஜா சந்திரசேகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், பொதுமக்களிடம் ஆன்லைனில் பணம் பெற்றுக்கொண்டு பட்டாசு வழங்காமல் சிலர் ஏமாற்றிவருவதாக தெரிவித்தார். மேலும், அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் மட்டுமே பொதுமக்கள் பட்டாசு வாங்கவேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.