தென்காசி அருகே குற்றாலநாதர் சுவாமி கோயில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
குற்றாலத்தில் உள்ள குற்றாலநாதர் சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறும் நிலையில், முக்கிய நிகழ்வான தேரோட்டம் 12ம் தேதி நடைபெறவுள்ளது. இதை தொடர்ந்து 14ம் தேதி காலையில் தாண்டவ தீபாராதணை நடைபெறவுள்ளது.