லெபனான் மீதான தாக்குதலில் நஸ்ரல்லாவின் வாரிசுகளை இஸ்ரேல் ராணுவம் ஒழித்துவிட்டதாக அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தின் காசா அமைப்பை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி போர் ஏற்பட்டது. இந்த போரில் 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் நஸ்ரல்லா கொல்லப்பட்ட நிலையில், நஸ்ரல்லாவின் வாரிசுகளையும் அழித்துவிட்டதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஹிஸ்புல்லா அமைப்பு பலவீனமாகவிட்டதாகவும், ஹிஸ்புல்லாவிடம் இருந்து லெபனான் மக்கள் விடுபட்டால்தான் போர் முடிவுக்கு வரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.