மேற்குவங்க மாநிலம் நாடியா மாவட்டம் கிருஷ்ணாநகர் விளையாட்டு மைதானம் அருகே சிறுமி உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக சிறுமியின் நண்பர் கைது செய்யப்பட்டார். இதனிடையே, கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனை பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கிடைக்கக் கோரி, சிலிகுரியில் மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.