டெல்லியில் அடுக்குமாடி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
டெல்லி Bholanath பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதால் வீட்டிலிருந்தவர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்தால் வீட்டில் சூழ்ந்த புகையால் மூச்சுத்திணறி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.