குற்றப்பதிவேடு ரவுடிகள் 30 பேருக்கு, புதுச்சேரி முத்தியால்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தனசேகர் எச்சரிக்கை செய்து அனுப்பினார்.
முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புதிதாக பதவியேற்ற ஆய்வாளர் தனசேகர், திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 30 பேரை அழைத்து விசாரணை நடத்தினார்.
மேலும், மாமூல் வாங்குவது, கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவது, கஞ்சா விற்பனை செய்வது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால், குண்டாஸ் பாயும் என 30 பேருக்கும் காவல் ஆய்வாளர் தனசேகர் எச்சரிக்கை விடுத்தார்.