கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறையும், தமிழக அரசும் செலவிட்ட தொகை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா என, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசுவதும், ஆன்மிக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது பக்தி வேடம் போடுவதும் சந்தர்ப்பவாத அரசியலா இல்லையா என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் விளக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கோயில்களில் உண்டியல் பணத்தை கொண்டு திருமணங்கள் செய்து வைக்கப்படும் நிலையில், விளம்பரம் மட்டும் முதலமைச்சரின் பெயரில் செய்யப்படுவதாக குற்றம்சாட்டியள்ளார்.
ஒருபுறம் ஈவெராவை தங்கள் தலைவர் என கூறுவது, மறுபுறம் அறநிலையத்துறை நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொள்வதாக பெருமை பேசுவது முதலமைச்சர் ஸ்டாலின் செய்யும் பகல் வேட அரசியல் எனவும் காடேஸ்வரா சுப்பிரமணியம் விமர்சித்துள்ளார்.
ஆக்கிரமிப்பு நிலத்தில் உள்ளதாக கூறி கோயில்கள் இடிக்கப்பட்டதை போல, கோயில் நிலத்தில் உள்ள பேருந்து நிலையம், நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்டவற்றை இடிக்க துணிச்சல் உள்ளதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.