மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், பொதுமக்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஆதினம், தீய சக்தியின் அழிவுக்கும், நன்மைகளின் பெருக்கத்திற்கும் அடையாளமாகத் தீபாவளி நன்னாள் திகழ்வதாகவும் , துன்பங்கள் விலகி சுபிட்சம் பெருக இறைவனை பிரார்த்திக்க வேண்டும் எனவும் தெரிவித்தார், மேலும், இந்த தீபாவளி நன்னாள் மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் கொடுத்து வாழ வகை செய்ய வேண்டும் எனவும் அவர் வாழ்த்தினார்.