தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு, ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்லவழ்வுதுறை அமைச்சர் மாசுப்ரமணியன் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார். சிறப்பு உயர்நிலை படிப்பு, ஆராய்ச்சி, மருத்துவம், பல் மருத்துவம் சார்ந்த மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
முன்னதாக, சுதந்திர போராட்ட வீரர்களான மருது சகோதரர்களின் நினைவு தினத்தை ஒட்டி, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் வைக்கப்பட்ட மருது சகோதரர்களின் திருவுருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.