இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 4 நாட்களுக்குள் பதவி விலக வேண்டுமென அவரது சொந்த கட்சி எம்பிக்களே கெடு விதித்துள்ளனர்.
கனடாவில் வசித்த காலிஸ்தான் அமைப்பின் தலைவர் கொலை செய்யப்பட்ட நிலையில், இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்புள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான போக்கை கடைப்பிடித்து வரும் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலக வேண்டுமென அவரது சொந்த கட்சி எம்பிக்களே போர்க்கொடி தூக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் 28-ம் தேதிக்குள் ட்ரூடோ ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், மீண்டும் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்றும், அவர் சார்ந்த லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்ய வேண்டுமென அண்மையில் நடைபெற்ற லிபரல் கட்சியின் கூட்டத்தில் அவரது முன்னிலையே கடிதம் வாசிக்கப்பட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.