ராமநாதபுரத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் வருகையையொட்டி நடப்பட்டுள்ள திமுக கொடி கம்பங்களால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ராமநாதபுரத்தில் நடைபெறும் திமுக நிர்வாகியின் இல்லத்திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். அவரை வரவேற்கும் விதமாக, ராமேஸ்வரம் – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் இரு புறமும் திமுக கொடி கம்பங்கள் நடப்பட்டுள்ளன.
அவை ஆழமாக குழி தோண்டி நடப்படாததால், பல இடங்களில் அவை சாய்ந்து விழுந்து வருகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.