ராமேஸ்வரம் : 19 மீனவர்கள் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை!
Oct 26, 2025, 02:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ராமேஸ்வரம் : 19 மீனவர்கள் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை!

Web Desk by Web Desk
Feb 5, 2025, 05:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேரை அபராதத்துடன் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த ஜனவரி 26-ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 34 தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து அந்நாட்டு சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 34 பேரும் இலங்கை கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் 19 மீனவர்கள் மட்டும் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்படுவதாக கிளிநொச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்துடன் விடுதலை செய்யப்பட்ட 19 மீனவர்களில் 16 பேருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதமும், படகு ஓட்டிய 3 மீனவர்களுக்கு தலா 60 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த அபராதத் தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் 16 பேரை 6 மாதமும், படகை ஓட்டிய 3 பேரை ஓராண்டும் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 15 மீனவர்களின் படகு எண் தவறாக இருப்பதால் அவர்களை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் மறுத்துள்ளது.

இந்த வழக்கின் அடுத்த விசாரணையை பிப்ரவரி 10-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக கிளிநொச்சி நீதிமன்றம் அறிவித்தது. விடுவிக்கப்பட்ட மீனவர்கள் ஓரிரு தினங்களில் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: India VS Srilanka19 fishermen releasedRameswaram: 19 fishermen released on condition!
ShareTweetSendShare
Previous Post

மதுரை : கிரில், தந்தூரி சிக்கன் சாப்பிட்ட 22 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு!

Next Post

கிருஷ்ணகிரி : 8-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை!

Related News

தாம்பரம் அருகே அர்ச்சகரின் மோதிரத்தை பழுது பார்ப்பது போல் திருடிய நபர் கைது!

10 நாட்களுக்கு பின்னர் குற்றால மெயின் அருவியில் குளிக்க அனுமதி – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

நாகர்கோவில் : சேதப்படுத்தப்பட்ட எம்ஜிஆர் சிலை – அதிமுகவினர் போராட்டம்!

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

விருதுநகர் : காணாமல் போன இளைஞர் கண்மாயில் சடலமாக மீட்பு!

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

Load More

அண்மைச் செய்திகள்

மெக்சிகோ : வெள்ளத்தால் ஏற்பட்ட சேற்றில் சிக்கி உயிருக்கு போராடிய எலி மீட்பு!

பாக். அணு ஆயுதங்கள் அமெரிக்கா கட்டுப்பாட்டில் இருந்தது – முன்னாள் சிஐஏ அதிகாரி

பாகிஸ்தானின் கடன் சுமை ரூ.25 லட்சம் கோடியாக உயர்வு!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

புதினுடன் பேசி என் நேரத்தை நான் வீணாக்க விரும்பவில்லை – டிரம்ப்

கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ மீது அமெரிக்கா பொருளாதார தடை!

இணைய குற்ற தடுப்பு ஒப்பந்தத்தில் 65 நாடுகள் கையெழுத்து!

மலேசியா : நடன கலைஞர்களுடன் டிரம்ப் நடனமாடி உற்சாகம்!

மாநில அளவிலான கராத்தே போட்டி – எடப்பாடி மாணவர்கள் சாதனை !

பெங்களூரு-ஹைதராபாத் தனியார் பேருந்து ஓட்டுநர் அஜாக்கிரதை – விபத்தில் சிக்கவிருந்த கார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies