விரைவில் சினிமாவை விட்டு விலகப் போவதாக இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன்’ படம், பிப்ரவரி 21-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் மிஸ்கின் கலந்து கொண்டார்.
அப்போது தொகுப்பாளர்கள் மேடையில் இருந்த திரையில், படக்குழுவினர் ஒவ்வொருவரின் புகைப்படங்களாக காட்டி இயக்குநர் மிஷ்கினிடம் ஒரு வரியில் கருத்து கேட்டனர்.
அதில் மிஷ்கினின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. அது குறித்து கருத்து தெரிவித்த அவர், விரைவில் சினிமாவை விட்டு விலகப் போகும் ஒருவன் என ஒருவரியில் பதில் கூறிவிட்டு சென்றார்.