பூந்தமல்லி அருகே சாப்பிட்டதற்கு பணம் கேட்ட உணவக உரிமையாளரை கத்தியால் வெட்டிய மூன்று பேருக்கு போலீசார் மாவு கட்டு போட்டுள்ளனர்.
செம்பரம்பாக்கம் பகுதியில் இளவரசு என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். அவரது கடைக்கு போதையில் வந்த மூன்று நபர்கள் உணவு சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்க மறுத்தாக கூறப்படுகிறது.
இதுகுறித்த கேட்ட இளவரசுவை, கத்தியால் வெட்டியதுடன், கடையை அடித்து உடைத்துவிட்டு, கல்லாவில் இருந்த பணத்தை எடுத்துகொண்டு அவர்கள் தப்பியோடினர். இது குறித்த புகாரின் பேரில் அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்தனர்.