நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரும் 20-ம் தேதி ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டுமென சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
ஈவெரா குறித்து சீமான் பேசிய விவகாரம் சர்ச்சையான நிலையில், தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
அதேபோல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது ஈவெராவின் வெங்காயத்தை வீசுபவர்கள் மீது வெடிகுண்டு வீசுவேன் என்று சீமான் பேசியிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் வரும் 20 ம் தேதி ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராக சீமானுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.