அமெரிக்காவில் உரிய ஆவணங்களின்றி குடியிருந்த 112 இந்தியர்கள் மூன்றாம் கட்டமாக அமிர்தசரஸ் வந்தடைந்தனர்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு, உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியுள்ளவர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
அதன்படி கடந்த பிப்ரவரி 5-ம் தேதி 104 இந்தியர்களும், நேற்று முன்தினம் 116 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்நிலையில், மூன்றாவது கட்டமாக 112 இந்தியர்கள் அமிர்தசரஸ் வந்தடைந்தனர்.