சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு இதுவரை ஊதியம் வழங்கப்படாததால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை STAR WART நிறுவனம் அனுப்பி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வடபழனி, அம்பத்தூர், மந்தைவெளி உள்ளிட்ட பணிமனைகளில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.
சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் மூலம் விரைவில் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தற்காலிக ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.