சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்தது. ஷ்ரேயாஸ் அய்யர் 79 ரன்களும், அக்சர் படேல் 42 ரன்களும் எடுத்தனர். கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்ட்யா 45 ரன்கள் அடித்தார்.
பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 205 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேன் வில்லியம்சன் அரைசதம் கடந்து 81 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார். நாளை நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
புதன்கிழமை நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் நியூசிலாந்து அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.