புதிய உச்சத்தை தொட்ட இசைஞானி இளையராஜா : சிம்பொனி என்றால் என்ன? :
Aug 6, 2025, 10:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதிய உச்சத்தை தொட்ட இசைஞானி இளையராஜா : சிம்பொனி என்றால் என்ன? :

Web Desk by Web Desk
Mar 9, 2025, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிம்பொனி இசையை உருவாக்கிய முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்திருக்கும் இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ் ஜனம் தொலைக்காட்சி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் சிம்பொனி என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஒரே நேரத்தில் நான்கு கவிஞர்கள் நான்கு வித்தியாசமான கவிதைகளைச் சொன்னால் நம்மால் அதை ரசிக்க முடியுமா? முடியாது. ஆனால் ஒரே நேரத்தில் பல்வேறு இசைக்கருவிகள் இணைந்து தரும் இசையை நம்மால் கொண்டாட முடியும்.

சிம்பொனி என்றால் என்ன கேள்விக்கு இசைஞானி இளையராஜா கொடுத்த எளிய விளக்கம் இது. சிம்பொனி என்பது WESTERN CLASSIC இசை மரபில் பல்வேறு இசைக்கருவிகள் ஒன்றாக இசைக்கப்படும் ஓர் ஒத்திசைத் தொகுப்பு. இது பல பகுதிகளைக் கொண்டது. அவை MOVEMENTS என்றழைக்கப்படுகின்றன.

பெரும்பாலும் ஒரு சிம்பொனி தொகுப்பு 4 MOVEMENT-களைக் கொண்டிருக்கும். அதில் ஒன்று SONATA என்ற வடிவத்தில் இருக்கும். சிம்பொனி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தெளிவான விதிகளும் கட்டுப்பாடுகளும் உண்டு.

30 முதல் 100 இசைக்கலைஞர்களைக் கொண்டு இசைக்கப்படும் நிகழ்வாக சிம்பொனி இருக்கும். அதில் VIOLIN, CELLO போன்ற தந்திக் கருவிகளும் CLARINET, TRUMPET, SAXOPHONE, புல்லாங்குழல் போன்ற காற்றால் இசைக்கப்படும் கருவிகளும் தாள இசைக்கருவிகளும் இடம்பெற்றிருக்கும்.

ஐரோப்பிய இசை வரலாற்றில் WESTERN CLASSIC இசையின் காலகட்டமாக கருதப்படும் 1740 முதல் 1820-ஆம் ஆண்டு வரை சிம்பொனிகள் உருவாகத் தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. JOSEPH HAYDN, MOZART, BEETHOVEN ஆகியோர் சிறந்த சிம்பொனி இசைத் தொகுப்புகளை உருவாக்கியவர்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை சிம்பொனியை உருவாக்கியிருக்கும் முதல் நபர் இளையராஜாதான். 34 நாட்களில் தாம் உருவாக்கிய சிம்பொனிக்கு VALIANT என்று பெயர் வைத்தார் இசைஞானி. தமது முதல் சிம்பொனி தொகுப்பை லண்டனின் ROYAL PHILHARMONIC ORCHESTRA-வை வைத்து பதிவு செய்துள்ளார். சிம்பொனியை இசைக்க WESTERN MUSIC-ஐ ஒத்திசைந்து வாசிக்கக்கூடிய கலைஞர்கள் தேவை என்பதால் லண்டன் குழுவை நாடினார் இளையராஜா. மேலும் சிம்பொனியை இசைக்க அதற்கென வடிவமைக்கப்பட்ட அரங்கம் வேண்டும்.

இதற்கு முன்பும் மேற்கத்திய இசையில் சில முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார் இளையராஜா. 1986-ஆம் ஆண்டு 10 TRACK-களைக் கொண்ட ‘HOW TO NAME IT?’ என்னும் இசைத்தொகுப்பை வெளியிட்டார். இளையராஜாவின் முதல் FUSION ALBUM-ஆக அது அமைந்தது.

1988-ஆம் ஆண்டு ‘NOTHING BUT WIND’ என்ற ஆல்பத்தை வெளியிட்டார் இளையராஜா. WESTERN CLASSIC இசை, இந்திய நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசை ஆகியவற்றை இணைத்து அதை உருவாக்கியிருந்தார். 2005-ஆம் ஆண்டு மேற்கத்திய இசையுடன் திருவாசகத்தை வெளியிட்டார் இசைஞானி.

‘தளபதி’ திரைப்படத்தில் இடம்பெற்ற “சுந்தரி கண்ணால் ஒரு சேதி”, ‘மூடுபனி’-யில் வரும் “என் இனிய பொன் நிலாவே”, ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தில் கமல் பாடிய “நினைவோ ஒரு பறவை” ஆகிய பாடல்களில் சிம்பொனி இசையின் வடிவத்தை பயன்படுத்தியிருந்தார் இளையராஜா.

ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து மாபெரும் சாதனைகளை படைத்த பிறகும் தமது தேடலால் புதுப்புது உயரங்களைத் தொட்டு தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் பெருமை தேடித் தருகிறார் இசைஞானி.

Tags: இசைஞானி இளையராஜாWhat is a symphony?: Musician Ilayaraja reaches new heights!சிம்பொனிWESTERN CLASSIC
ShareTweetSendShare
Previous Post

வாடகை வாகனங்களில் QR Code – குற்ற செயல்களை தடுக்க சென்னை காவல்துறை நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Next Post

குன்றத்தூர் அருகே சுந்தரேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்!

Related News

இன்றைய தங்கம் விலை!

சென்னையில் கோயிலில் லாக்கரை உடைத்து ரூ. 7 லட்சம் கொள்ளை!

கோவை அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்தி வர தாமதம் – தாயின் சடலத்தை காரில் எடுத்துச் சென்ற மகன்!

அரசுப் பள்ளி மாணவர் நீட் தேர்வில் வெற்றி – மருத்துவராக கிராமத்தில் பணியாற்ற விரும்புவதாக பேட்டி!

மதுரையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய மழை!

நாமக்கல் அருகே கோயில் நிலத்தை மீட்கச்சென்ற அதிகாரிகள் சிறைபிடிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்காக மரத்தடியில் அமர வைக்கப்பட்ட மாணவர்கள்- அதிமுக போராட்டம்!

ஓசூர் அருகே தனியார் பள்ளி வேன் மோதி சிறுமி உயிரிழப்பு – பொதுமக்கள் சாலை மறியல்!

தாம்பரம் மாநகராட்சியில் போலி ரசீதுகள் மூலம் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு!

அசோக்குமார் அமெரிக்கா செல்லும் விவகாரம் – அமலாக்கத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை – இபிஎஸ் குற்றச்சாட்டு

இந்தியா எந்த நாட்டுடன் வர்த்தகத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதை அமெரிக்கா கட்டாயப்படுத்த முடியாது – ரஷ்யா

அடுத்து 24 மணி நேரத்தில் இந்திய பொருட்களுக்கான வரியை மேலும் அதிகரிப்பேன் – ட்ரம்ப் அறிவிப்பு!

உத்தரகாண்ட் நிலச்சரிவு – பிரதமர் மோடி இரங்கல்!

உத்தரகாசி காட்டாற்று வெள்ளம் – மீட்பு பணி தீவிரம்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 6 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies