புதுக்கோட்டை மாநகராட்சி கூட்ட அரங்கில் மாமன்ற உறுப்பினர்களுக்காான கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாநகராட்சி இயல்பு கூட்டம் மேயர் திலகவதி செந்தில் தலைமையில் நடைபெற்றது.அப்போது, மக்கள் நலனுக்கு எதிராக தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
கூட்டரங்கின் வாயில் கதவு முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், மேயர், துணை மேயர் உள்ளிட்டோர் வெளியேற முடியாமல் தவித்தனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.