அர்ஜென்டீனா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்களும் கால்பந்து ரசிகர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தடையை மீறி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியது. போலீசாரின் எச்சரிக்கையும் மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வாகனங்களை தீ வைத்து எரித்தனர்.
மேலும், போலீசாரை நோக்கி கற்களை வீசியதால் பதிலுக்கு போலீசாரும் தடியடி நடத்தினர். இதனால் அந்தப் பகுதியே கலவர பூமி போல காட்சி அளித்தது.