நாட்டில் சிறுவர்களால் இயக்கப்படும் வாகனங்களால் நேரிடும் விபத்துக்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.
சிறார் வாகன விபத்து தொடர்பாக மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு நிதின் கட்கரி பதிலளித்துப் பேசினார்.
அப்போது, 2023-24ஆம் ஆண்டில் நாட்டில் சிறார்களால் இயக்கப்பட்ட வாகனங்களால் 11 ஆயிரத்து 890 விபத்துகள் நேரிட்டதாகத் தெரிவித்தார். அதிகபட்சமாகத் தமிழகத்தில் 2 ஆயிரத்து 63 விபத்துகள் ஏற்பட்டதாகக் கூறினார்.
அடுத்ததாக மத்தியப்பிரதேசத்தில் ஆயிரத்து 138 விபத்துகள் நேரிட்டதாகவும், மகாராஷ்டிராவில் ஆயிரத்து 67 விபத்துகள் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.