சாதிவாரி கணக்கெடுப்பு - பேரவையில் காரசார விவாதம்!
Mar 20, 2026, 03:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சாதிவாரி கணக்கெடுப்பு – பேரவையில் காரசார விவாதம்!

Murugesan M by Murugesan M
Mar 20, 2025, 05:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சாதிவாரி கணக்கெடுப்பு  நடத்துவது தொடர்பாகச் சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.

பேரவையில் உரையாற்றிய பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, தமிழகத்தில் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

சாதிவாரி கணக்கெடுப்பு என்பது சமூக நீதியின் ஒரு அங்கம் எனவும், தெலங்கானாவில் கணக்கெடுப்பு நடத்தியதன் மூலம் மாநில அரசுக்குத் தடையில்லை என்பது தெளிவாகிறது என்றும் சுட்டிக்காட்டினார். படிப்பு, வேலை வாய்ப்பில் சாதி பார்க்கும் போது சாதியை எப்படி ஒழிக்க முடியும்? எனவும் ஜி.கே.மணி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் மெய்ய நாதன், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசிடம் தான் உள்ளதாகக் கூறினார். மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் எனப் பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளதாகவும் விளக்கம் அளித்தார்.

அமைச்சரின் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன்,  மாநில அரசுகளே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியும் எனக் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் இணைந்து பேசி முடிவெடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாகக் கூறினார். முதலில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துங்கள் எனவும், பின்னர் நீதிமன்றம் தடை விதித்தால் அப்போது பார்த்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து உரையாற்றிய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது மத்திய அரசின் பணி எனக் குறிப்பிட்டார். எனவே சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்துவதே சரியாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.

மீண்டும் உரையாற்றிய பாமக உறுப்பினர் ஜி.கே.மணி, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாமல் இருந்தால் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீடு வழக்கில் கேள்வி வந்தால் என்ன செய்வது? என வினவினார். அதற்காகவாவது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Tags: Caste-wise census - heated debate in the assembly!சட்டப்பேரவையில் காரசார விவாதம்
ShareTweetSendShare
Previous Post

ரவுடி ஜான் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

Next Post

மதுரை : லாரி மீது கார் மோதி விபத்து – ஓட்டுநர் உயிரிழப்பு!

Related News

கூடலூர் அருகே செல்ஃபி எடுக்க முயன்றபோது 150 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர்!

திருச்சி திருவானைக்காவல் கோயில் பங்குனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தர்ம முனீஸ்வரனுக்கு திடீரென உடல்நலக்குறைவு – சிசிக்சைக்கு பின் மீண்டும் விசாரணை!

எடப்பாடியில் விடிய விடிய மழை – வட்டாட்சியர் அலுவலகத்தில் மழைநீர் தேக்கம்

சேலத்தில் திடீர் மழை – சாயக்கழிவு திறந்து விடப்பட்டதால் விவசாயிகள் கொந்தளிப்பு!

மதுரையில் கொட்டி தீர்த்த கனமழை – சாலைகளில் நீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

3-வது குழந்தையை பெற்றெடுக்கும் பெண்ணுக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறை – சென்னை உயர் நீதிமன்றம்

அமைச்சர் பதவி வேண்டாம் என்றால் மட்டுமே சீட் – துரைமுருகனுக்கு திமுக மேலிடம் நிபந்தனை!

‘தக்னி’ இஸ்லாமியர்கள் ஆளுங்கட்சிக்கு எதிராக போர்க்கொடி!

அன்னை தமிழ் மன்றத்தின் முயற்சியால் பஹ்ரைனிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள்!

ராஸ் லாஃபான் ஆலை மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் எதிரொலி – கேஸ் உற்பத்தியை நிறுத்தியது கேஸ்!

தேர்தல் பறக்கும் படையினரின் சோதனைக்கு எதிர்ப்பு – புதுச்சேரி முதல்வரின் ஆதரவாளர்கள் வாக்குவாதம்!

கூட்டணி குறித்து தவெகவுடன் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை – இபிஎஸ்

திமுகாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ‘தக்னி’ இஸ்லாமியர்கள்

ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் ஹரியானாவில் பொதுக்குழு கூட்டம்

சத்குரு குறித்த அவதூறு செய்தி.. நீக்கக்கோரி நக்கீரன் ஊடகத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies