கொள்ளிடம் ஆற்றில் நேரடியாகக் கலக்கும் கழிவுநீரால் பாதிப்பு : கண்டுகொள்ளாத அதிகாரிகள்!
Mar 15, 2026, 01:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கொள்ளிடம் ஆற்றில் நேரடியாகக் கலக்கும் கழிவுநீரால் பாதிப்பு : கண்டுகொள்ளாத அதிகாரிகள்!

Murugesan M by Murugesan M
Mar 24, 2025, 06:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் கலக்கும் கழிவுநீரால் தொற்று நோய் பரவுவதோடு, சலவைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் கலக்கும் கழிவுநீர் குறித்தும், அதனால் பாதிக்கப்படும் சலவைத் தொழிலாளர்கள் பற்றியும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறு திருச்சியின் மிக முக்கியமான அடையாளங்களில் பிரதானமாக உள்ளன. அத்தகைய ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் வகையில் ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் பகுதியில் 77 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.

கட்டி முடிக்கப்பட்டும் இதுவரை பயன்பாட்டிற்கு வராத கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தால், ஸ்ரீரங்கம் பகுதியில் இருக்கும் வணிக வளாகங்கள், கடைகள், தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் கழிவு நீர் நேரடியாக ஆற்றில் கலப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

கொள்ளிடம் ஆற்றில் நேரடியாகக் கலக்கும் கழிவுநீரால், அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்குத் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் கலப்பது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அதிலும் குறிப்பாக, நம்பர் ஒன் டோல்கேட் அருகே கொள்ளிடம் ஆற்றுக் கரையோரம் வசித்துவரும் ஐநூறுக்கும் அதிகமான சலவைத் தொழில் செய்யும் குடும்பங்கள் இந்த கழிவுநீரால் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

கொள்ளிடம் ஆற்றில் கலக்கும் கழிவுநீரால் அதில் சலவை செய்யப்படும் துணிகளில் துர்நாற்றம் வீசுவதாகக் கூறி பொதுமக்கள் சலவைக்கு தங்கள் துணிகளைத் தர தயங்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது

கொள்ளிடம் ஆற்றை நம்பியே தொழில் செய்து வரும் சலவைத் தொழிலாளர்களுக்குச் சருமப் பிரச்சனையும் அண்மைக்காலமாக எழத் தொடங்கியிருக்கிறது. வாழ்வாதாரத்தோடு தங்களின் உடல்நலத்தையும் பாதுகாக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை நிரந்தரமாகத் தடுக்க வேண்டும் எனச் சலவைத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags: திருச்சி கொள்ளிடம்Impact of sewage flowing directly into the Kollidam River: Ignorant officials!
ShareTweetSendShare
Previous Post

சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் – இதுதான் ஜனநாயக ஆட்சியா? : ஸ்டாலினுக்கு எல்.முருகன் கேள்வி!

Next Post

சவுக்கு சங்கர் வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அண்ணாமலை கண்டனம்!

Related News

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies