கொள்ளிடம் ஆற்றில் நேரடியாகக் கலக்கும் கழிவுநீரால் பாதிப்பு : கண்டுகொள்ளாத அதிகாரிகள்!
Oct 22, 2025, 11:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கொள்ளிடம் ஆற்றில் நேரடியாகக் கலக்கும் கழிவுநீரால் பாதிப்பு : கண்டுகொள்ளாத அதிகாரிகள்!

Web Desk by Web Desk
Mar 24, 2025, 06:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் கலக்கும் கழிவுநீரால் தொற்று நோய் பரவுவதோடு, சலவைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் கலக்கும் கழிவுநீர் குறித்தும், அதனால் பாதிக்கப்படும் சலவைத் தொழிலாளர்கள் பற்றியும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறு திருச்சியின் மிக முக்கியமான அடையாளங்களில் பிரதானமாக உள்ளன. அத்தகைய ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் வகையில் ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் பகுதியில் 77 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.

கட்டி முடிக்கப்பட்டும் இதுவரை பயன்பாட்டிற்கு வராத கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தால், ஸ்ரீரங்கம் பகுதியில் இருக்கும் வணிக வளாகங்கள், கடைகள், தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் கழிவு நீர் நேரடியாக ஆற்றில் கலப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

கொள்ளிடம் ஆற்றில் நேரடியாகக் கலக்கும் கழிவுநீரால், அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்குத் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் கலப்பது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அதிலும் குறிப்பாக, நம்பர் ஒன் டோல்கேட் அருகே கொள்ளிடம் ஆற்றுக் கரையோரம் வசித்துவரும் ஐநூறுக்கும் அதிகமான சலவைத் தொழில் செய்யும் குடும்பங்கள் இந்த கழிவுநீரால் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

கொள்ளிடம் ஆற்றில் கலக்கும் கழிவுநீரால் அதில் சலவை செய்யப்படும் துணிகளில் துர்நாற்றம் வீசுவதாகக் கூறி பொதுமக்கள் சலவைக்கு தங்கள் துணிகளைத் தர தயங்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது

கொள்ளிடம் ஆற்றை நம்பியே தொழில் செய்து வரும் சலவைத் தொழிலாளர்களுக்குச் சருமப் பிரச்சனையும் அண்மைக்காலமாக எழத் தொடங்கியிருக்கிறது. வாழ்வாதாரத்தோடு தங்களின் உடல்நலத்தையும் பாதுகாக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை நிரந்தரமாகத் தடுக்க வேண்டும் எனச் சலவைத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags: திருச்சி கொள்ளிடம்Impact of sewage flowing directly into the Kollidam River: Ignorant officials!
ShareTweetSendShare
Previous Post

சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் – இதுதான் ஜனநாயக ஆட்சியா? : ஸ்டாலினுக்கு எல்.முருகன் கேள்வி!

Next Post

சவுக்கு சங்கர் வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அண்ணாமலை கண்டனம்!

Related News

ஆஃபீஸ் பாய் டூ CEO : மெய்சிலிர்க்க வைத்த இளைஞரின் வெற்றி பயணம்…!

அமெரிக்காவை முந்தும் சீனா : மிகப்பெரிய ராணுவ போக்குவரத்து விமானம் வடிவமைப்பு!

அமெரிக்க வரி விதிப்பை புதிய வாய்ப்பாக மாற்றிய இந்தியா : பிற நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரித்து துணிச்சல் முயற்சி!

அதிநவீன கப்பல்களை தயாரித்து வரும் “கொச்சி ஷிப்யார்டு” : தன்னிறைவு நோக்கில் இந்திய கடற்படை ஓர் புது அத்தியாயம்…!

அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு : சானிடைசர்களுக்குத் தடை – ஐரோப்பிய ஒன்றியம் முடிவு?

350 கி.மீ., வேகத்தில் ரயில்கள் பறக்கும் : அறிமுகமாகிறது VANDE BHARAT 4.O!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவை சீண்டும் தைவான் : உள்நாட்டு சவால்களை சந்திக்க முடியாமல் திணறல்!

கனடாவில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை : இந்திய தூதர் சொல்வது என்ன?

AWS கோளாறால் முடங்கியது இணைய உலகம் : செயலிகள் செயலிழப்பு – பயனர்கள் பரிதவிப்பு!

பிரான்ஸ் அதிபரை கோபத்தில் ஆழ்த்திய துணிகர கொள்ளை – நெப்போலியனின் நூற்றாண்டு பொக்கிஷம் மீட்கப்படுமா?

இஸ்ரேல்-காசா எல்லையை பிரிக்கும் மஞ்சள் கோடு : மக்களின் உயிரை பறிக்கும் ஆபத்தாக மாறிய சோகம் !

கடல் அரசன் INS விக்ராந்தில் பிரதமர் மோடி : கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்…!

நாகை : தொடர் கனமழையால் 1000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் பாதிப்பு!

நாடு வளர வேண்டும் என்றால் மக்கள் இந்திய தயாரிப்புகளை வாங்க வேண்டும் – பிரதமர் மோடி

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை கந்த சஷ்டி விழா – யாக சாலை பூஜையுடன் தொடக்கம்!

வங்க கடலில் புயல் உருவாகுமா? -வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பேட்டி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies