யுகாதி பண்டிகையை முன்னிட்டு ஓசூர் மலர் சந்தையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
ஓசூர் மலர்ச்சந்தையில் கடந்த சில நாட்களாகப் பூக்களின் விலை குறைவாகக் காணப்பட்ட நிலையில், யுகாதி பண்டிகையை முன்னிட்டு ஒரு கிலோ மல்லிகைப்பூ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோன்று, கனகாம்பரம், சாமந்தி, ரோஜா உள்ளிட்ட பூக்களின் விலையும் அதிகரித்துள்ளதால், விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.