திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
காரைக்கால் அடுத்த திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் வாக்கிய பஞ்சாங்க முறைப்படி சனிப்பெயர்ச்சி விழா அடுத்த ஆண்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருக்கணித பஞ்சாங்க முறைப்படி இன்று சனிப்பெயர்ச்சி நடைபெறுவதாகக் கூறப்படுவதால் கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
தொடர்ந்து அவர்கள் நலன் தீர்த்தத்தில் புனித நீராடினர். பின்னர் வெள்ளிக்கவச அலங்காரத்தில் காட்சியளித்த சனீஸ்வர பகவானை நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.