மேற்கு வங்கத்தில் வீட்டிலிருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட கோர விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சவுத் பர்கானாஸ் மாவட்டம், தோலகாட் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் திடீரென எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது.
இதில் 4 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த ஒரு பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.