தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக திமுக கவுன்சிலரின் மகன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மட்ட கடை பகுதியில் ஜெர்சன் என்ற திமுக கவுன்சிலரின் மகனை பிடித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அவரிடம் 350 கிராம் கஞ்சா இருப்பதை அறிந்த போலீசார், அவரை கைது செய்தனர். தொடர்ந்து ஜெர்னசிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், கஞ்சா விற்பனையில் தொடர்புடைய மேலும் 3 பேரைக் கைது செய்தனர்.