குஜராத்திலுள்ள நீர் சுத்திகரிப்பு ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின.
பாருச் பகுதியில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீரை விசிறியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ரசாயனப் பொருட்கள், இயந்திரங்கள் தீக்கிரையானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.