மத்திய அரசு இஸ்லாமியர்களுக்கு எதிராகச் செயல்படுவதாகக் கூறப்படுவது உண்மை அல்ல என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்பு திருத்தச் சட்டம் உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், கேரளாவின் கொச்சிக்கு வருகை தந்த மத்திய அமைச்சர் கிரிண் ரிஜிஜு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், மற்றவர்களின் சொத்துகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் வக்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.