இந்தியாவின் சில்லறை பணவீக்கம் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்குச் சரிவைச் சந்தித்திருக்கிறது.
நாடு முழுவதும் குறைந்துவரும் விலைவாசி காரணமாகச் சில்லறை பணவீக்கமானது, ரிசர்வ் வங்கியால் கட்டுப்படுத்தக் கூடிய அளவிலேயே இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடந்த மார்ச் மாதத்தில் 3.34 சதவீதமாகச் சில்லறை பணவீக்கம் குறைந்ததாகவும், இதனால் பொதுமக்களின் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த பிப்ரவரியில் 3.61 சதவீதமாகப் பணவீக்கம் பதிவான நிலையில், வரும் நாட்களில் சில்லறை பணவீக்கம் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.