எரி உலையால் கதறும் வடசென்னை!
Aug 15, 2025, 01:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

எரி உலையால் கதறும் வடசென்னை!

Web Desk by Web Desk
Apr 21, 2025, 08:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை கொடுங்கையூர் பொதுமக்களின் உயிருக்கு உலை வைக்கும் எரியுலையையை அமைக்க அப்பகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எதிர்ப்பை மீறி எரியுலையை அமைக்கும் சென்னை மாநகராட்சி குறித்தும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் இந்தச் செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

வடசென்னை என்றாலே அங்கு வசிக்கும் மக்களின் உழைப்பை புறக்கணித்து அங்கிருக்கும் தொழிற்சாலைகள் தான் முன்னிலைப்படுத்தப்படுகின்றன. சென்னையில் அதிகளவு ஆபத்துமிக்க தொழிற்சாலைகள் இயங்கும் பகுதியில் வடசென்னை பகுதி முதன்மையான இடமாகத் திகழ்ந்து வருகிறது.

கெமிக்கல் நிறுவனங்கள், எண்ணெய் கிடங்குகள், உலோக நிறுவனங்கள் என எண்ணிலடங்காத தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் வடசென்னை பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி கொண்டிருக்கின்றன.

கொடுங்கையூர் குப்பைக் கிடங்கிலிருந்து வெளியேறும் துர்நாற்றமும், அதனால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளிலிருந்து தங்களை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து வைத்து வரும் வடசென்னை பகுதி மக்களுக்குப் பேரிடியாக அமைந்திருக்கிறது சென்னை மாநகராட்சியின் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம். கொடுங்கையூர் பகுதியில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் இயங்கி வரும் இந்த மாநகராட்சியின் குப்பைக் கிடங்கில் கிட்டத்தட்ட 15 மண்டலங்களில் சேகரிக்கப்படு குப்பைகள் கொட்டப்படுகின்றன.

குப்பைகளிலிருந்து ஏற்படும் பாதிப்பு ஒருபுறமிருக்க அந்தக் குப்பைகளை எரித்து அதன் மூலம் மின்சாரம் தயாரிக்க முடிவு செய்திருக்கும் சென்னை மாநகராட்சியின் திட்டம் அப்பகுதி மக்களின் உயிருக்கே உலை வைக்கும் விதமாக அமைந்திருக்கிறது.

ஏற்கனவே மணலி பகுதிகளில் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அமைந்திருக்கும் எரி உலையால் மூச்சுத்திணறல், காச நோய், நரம்பு தளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு நோய்களைச் சந்தித்து வரும் பொதுமக்கள் கொடுங்கையூர் குப்பைக் கிடங்களில் பல நூறு கோடி ரூபாய் மதிப்பில் 2 எரி உலைகளை அமைக்க முயற்சிக்கும் சென்னை மாநகராட்சியின் முடிவுக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கிருஷ்ணமூர்த்தி நகர், எழில்நகர், ராஜரத்தினம் நகர், எம் கே பி நகர், சத்தியமூர்த்தி நகர், முல்லை, நகர் எனப் பல்வேறு பகுதிகளில் சுமார் 5 லட்சம் அளவிலான மக்கள் வசித்து வரும் நிலையில், இது போன்ற எரியுலை திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டால் வடசென்னை பகுதி மக்கள் வாழவே தகுதியற்ற இடமாக மாறிவிடும் எனத் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

வடசென்னை வளர்ச்சித் திட்டம் எனும் பெயரில் ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கிப் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் நடைபெறுவதாகக் கூறும் தமிழக அரசே, அப்பகுதிகளை ஆபத்துமிக்க பகுதியாக மாற்றும் எரியுலை திட்டங்களை அமைக்க முற்படுவது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல எனச் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்னையின் மற்ற பகுதிகளைப் போல வடசென்னை பகுதி மக்களும் பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் வாழத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.

Tags: North Chennai is screaming from the furnacசென்னை கொடுங்கையூர்வடசென்னை
ShareTweetSendShare
Previous Post

மின்வாரிய ஊழியர்களை தாக்கிய திமுகவினர் : அண்ணாமலை கண்டனம்!

Next Post

வயல் TO வானளாவிய குடியிருப்பு : டாடா சந்திரசேகரனின் வெற்றிப் பயணம்!

Related News

பெரம்பலூர் : ஆட்டோ ஓட்டுநரை வெட்டி சென்ற மர்ம நபர்கள்!

தியாகிகள் மாதாந்திர ஓய்வூதியம் 22,000 ஆக உயர்வு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

பெரம்பலூர் அருகே திமுக எம்பி அருண் நேருவை முற்றுகையிட்ட பெண்கள்!

79-வது சுதந்திர தினம் – கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய முதல்வர் ஸ்டாலின்!

திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் – சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!

சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலை நினைவு கூர்வோம் – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

‘ரூட்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு

சின்சினாட்டி டென்னிஸ் – கிராச்சேவா, குடெர்மெடோவா காலிறுதிக்கு தகுதி!

79-வது சுதந்திர தினம் – தேசிய கொடி ஏற்றிய ஜெ.பி.நட்டா, நயினார் நாகேந்திரன்!

அமைதி நிறைந்த புதிய உலகத்தை உருவாக்குவது நமது கடமை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு!

தீபாவளியின் போது நாட்டு மக்கள் ஒரு பெரிய பரிசு காத்திருக்கிறது – பிரதமர் மோடி

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

6 மாதங்களில் 6 போர் நிறுத்தம் – அலாஸ்காவில் ட்ரம்ப் பேட்டி!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது – பிரதமர் மோடி

ஒவ்வொருவரும் இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies