சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் நந்தியம் பெருமானுக்கு 12 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு நடைபெறும். இதேபோல் சித்திரை மாதத்தின் முதல் பிரதோஷமான இன்று பெருவுடையாருக்கு ஏற்ற பெருநந்திக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், திரவிய பொடி, இளநீர், எலுமிச்சை சாறு, கரும்புச்சாறு உள்ளிட்ட பன்னிரண்டு வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட நந்தியம் பெருமானுக்கு மகா தீபாரதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்..