போப் பிரான்சிஸ் கல்லறையை மக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர்.
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் கடந்த 21-ம் தேதி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவரது உடல், ரோமில் உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் உள்ள கல்லறை ஒன்றில் அடக்கம் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து கல்லறையை மக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டது. இதனால், ரோம் மட்டுமின்றி இத்தாலி முழுவதிலும் இருந்து ஏராளமானோர் போப் பிரான்சிஸின் கல்லறையை பார்வையிட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.