முசிறி அருகே தந்தை இறந்த நிலையிலும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவி 461 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
திருச்சி மாவட்டம், முசிறி அருகே கோணப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நிரஞ்சனா என்ற மாணவி தனியார்ப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார்.
சமூக அறிவியல் தேர்வின்போது அவரது தந்தை மாரடைப்பால் உயிரிழந்தார். அந்த சோகத்திலும் தேர்வெழுதிய மாணவி, 461 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
மேலும், அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இது குறித்துப் பேட்டியளித்த அவர், நன்கு படித்து தனது தந்தையின் கனவை நிறைவேற்றுவேன் எனத் தெரிவித்துள்ளார்.