நெதர்லாந்து, டென்மார்க் மற்றும் ஜெர்மனி ஆகிய 3 நாடுகளுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திங்கள்கிழமையன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த பயணத்தில், அந்நாடுகளின் தலைவர்களை அவர் சந்தித்துப் பேசுகிறார். அதில், இருதரப்பு உறவுகள் பற்றி முழு அளவில் ஆலோசனை மேற்கொள்கிறார்.
இதுதவிர, உலகளாவிய மற்றும் மண்டல அளவிலான விவகாரங்களில் பரஸ்பர நலன்களைப் பற்றியும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்தபோது, உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளின் ஒரு பகுதியாக இந்த 3 நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.