ஆந்திர மாநிலம், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளருமான கௌதம் கம்பீர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
தரிசனத்திற்குப் பின்னர் அவருக்குக் கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ ரங்க நாயக்க மண்டபத்தில் வேத ஆசீர்வாதங்கள் முழங்கத் தீர்த்த மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.