ஜூலை மாதம் முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக வெளியான தகவலுக்கு அமைச்சர் சிவசங்கர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில நாட்களாக மின் கட்டண உயர்வு குறித்து அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடப்படவில்லை எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என விளக்கம் அளித்துள்ள அமைச்சர், அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும் எனக் கூறியுள்ளார்.