கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கனமழை காரணமாக அறுவடைக்குத் தயார் நிலையிலிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
உளுந்தூர்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக விட்டு விட்டு கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அங்கு 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கிச் சேதமடைந்தது.