சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வள்ளிலிங்க சுவாமி கோயில் ஆராதனை விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டியில் 350க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. சீறிப்பாய்ந்த காளைகளைத் தீரத்துடன் காளையர்கள் அடக்கியதை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
இந்த நிலையில், காளைகள் முட்டியதில் காயம் அடைந்த 25க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கிடையே காளை முட்டியதில் படுகாயமடைந்த 14 வயது சிறுவன் அழகர் நம்பி, மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.