சத்தியமங்கலம் அருகே தரமற்ற கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டதைக் கண்டித்து மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
பனையம்பள்ளி கிராமத்தில் 500 மீட்டர் தூரத்திற்கு கான்கிரீட் சாலை அமைக்கப்பட்ட நிலையில், சில மாதங்களிலேயே பெயர்ந்து காணப்படுகிறது. இது தொடர்பாகப் புகாரளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் சாலை மறியல் போராட்டம் நடத்தி மக்கள் முடிவு செய்துள்ளனர்.