ஏற்காட்டில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டு வீடியோ எடுத்து ரீல்சாக வெளியிட்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொண்டை ஊசி வளைவுகளில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்ட இளைஞர்கள், நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள போர்டுகளை பிடுங்கி அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.
இந்த வீடியோ வைரலான நிலையில், சுற்றுலா பயணிகளுக்கு அச்சுறுத்தலாகச் செயல்பட்ட இளைஞர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.