அருணாச்சல பிரதேசத்தில் காட்டாற்று வெள்ளத்திற்கிடையே தொங்கு பாலத்தை ஆபத்தான முறையில் கடக்கும் நபரின் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
அஞ்சாவ் மாவட்டத்தில் காட்டாற்றின் குறுக்கே அமைந்துள்ள தொங்கு பாலத்தை, ஒருவர் ஆபத்தான முறையில் கடந்துள்ளார்.
இந்நிலையில், அது தொடர்பான வீடியோவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜு, பருவமழை அதிகப்படியாகப் பெய்யும் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் அனைவரும் கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.