18 ஆண்டுகளாக ஆர்சிபி அணிக்காக விளையாடிய விராட் கோலி இந்த வெற்றியின் மகிழ்ச்சி மிகுதியால், மைதானத்திலேயே ஆனந்த கண்ணீர் சிந்தினார்.
தொடர்ந்து வெற்றிபெற்ற பெங்களூரு அணிக்கு ஐசிசி தலைவர் ஜெய் ஷா மற்றும் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி ஆகியோர், ஐபிஎல் கோப்பையுடன், 20 கோடி ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலையையும் வழங்கினர். 2-ம் இடம் பிடித்த பஞ்சாப் அணிக்கு 12 அரை கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.