திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பழமையான மரங்கள் வெட்டப்பட்ட சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படும் நாளிலேயே, 50 ஆண்டுகள் பழமையான அரச மரம், கருங்காலி மரம் உள்ளிட்ட 4 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.
பல ஆண்டுகளாகக் கல்லூரி மைதானத்தில் நிழல் தந்த மரங்களை வெட்டியதால், மாணவர்கள் வேதனை அடைந்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்தி, எதிர்காலத்தில் இத்தகைய சம்பவம் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.